Monday, 15 July 2013

யுவராஜா கவிதைகள்



பகலை மெல்ல மெல்ல விழுங்கும் அமைதியான இரவின்
மடியிலே என் மனம் மட்டும் அமைதியற்று துடிக்கிறது ......!

போர்க்களத்தில் ஆயுதம் ஏந்தி களமாடிய நான்
இன்று அகதியாய் அந்நியநாட்டில்....!

எனக்கான தேசம் இருந்தும் ,
உரிமைகள் மறுக்கபட்டு
உணர்வுகள் சிதைக்கப்பட்டு ,
எதிரிகளின் கால்களில் அடிமையாய் வீழ்ந்து கிடக்கிறோம் !

தனி தமிழீழம் கேட்டு போராடிய நான்
இன்று அத்தியாவசிய தேவைகளுக்காக கையேந்தி நிற்கிறேன்... !

உலகில் ஆதரவளிக்க நாதியில்லாமல்
அனாதையாய் நிற்கிறோம் ....!

ஒவ்வொரு தமிழனின் குருதியிலும்
தமழீழ விடுதலை உணர்வு பரவி கிடக்கிறது
அதை எந்த சக்தியாலும் அடக்கி ஒடுக்கி விட முடியாது...!

என் கடைசி துளி ரத்தம் மண்ணில் சிந்தும் வரை
என் தமிழீழ விடுதலை போராட்டம் தொடரும் ....!

ஒரு வேளை நான் வீர மரணம் அடைந்தால்
ஒரு பிடி தமிழீழ மண்ணை கொண்டு வந்து
என் சாம்பலில் கரையுங்கள் ,
அந்த சாம்பலிலிருந்து மீண்டும் எழுவேன்
என் தாய் மண்ணை காக்க ...!!!

தமிழரின் தாகம் ! தமிழீழ தாயகம் !


யுவராஜாவின் வலிகள்http://yuvaraja331.blogspot.in/

No comments:

Post a Comment